Skip to main content

Posts

Showing posts from August, 2019

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு  என்பது  தமிழர் கலை  வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு  வில்லுப்பாட்டு  எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:  உடுக்கை ,  குடம் ,  தாளம் , கட்டை என்பனவாகும். மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது. ‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்...

Forest Fire

காட்டுத்தீ   என்பது, எரியக்கூடிய  தாவரங்களைக்  கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பெரிய  அளவு; தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம்; எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை;  சாலைகள் , ஆறுகள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறு படுத்துகின்றன. தீப்பிடித்தலுக்கான காரணம், பரவும் வேகம் போன்ற அதன் இயற்பியல் தன்மைகள், அங்குள்ள எரியக்கூடிய பொருட்கள், எரிதலில் தட்பவெப்பநிலைகளின் தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் காட்டுத்தீயின் தன்மைகள் வரையறுக்கப்படுகின்றன. அன்டார்ட்டிக்கா தவிர்ந்த, உலகின் எல்லாக் கண்டங்களிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. காலத்துக்குக் காலம் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. புதைபடிவங்களும், உலக வரலாறும் காட்டுத்தீ பற்றிய பல தகவல்களைத் தருகின்றன. காட்டுத்தீ பாரிய உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்த வல்லது. எனினும், சில தாவரங்கள் காட்டுத்தீயால் நன்மையடைவதும் தெரிய வருகிறது. சில இன...

Amazon, world's largest rainforest, is burning; here's why it affects you

Amazon Fire Travels 2500 KM

அமேசான் காட்டுத்தீ: 2500 கி.மீ கடந்து வந்து இருளை உண்டாக்கிய புகை தென் அமெரிக்காவின் மிக பெரிய நகரான சான் பௌலோவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி வானிலை அறிவிப்பில், சூரியன் மறையும் நேரம் மாலை 5.51 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இரண்டு மணிநேரத்திற்கு முன்பாகவே அங்கு இருள் சூழ்ந்துவிட்டது. தென் துருவத்தில் நிலவிய குளிரான வானிலையும், அமேசான் மழைக்காடுகளில் உருவான காட்டு தீயால் எழுந்த புகையும் சேர்ந்து இத்தகைய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சான் பௌலோ நகரின் வடக்கே 2,500 கிலோமீட்டர் தொலைவில் தீ ஏற்பட்டதால் எழுந்த புகை, இங்கு வந்ததால்தான் இந்த நகரில் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருள் சூழ்ந்துவிட்டதாக நம்பப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு :  https://www.bbc.com/tamil/global-49424102

About Amazon River

அமேசான் ஆறு   அமேசான்   தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு  மிசிசிப்பி ,  நைல் , மற்றும்  யாங்சே  ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த  ஆற்றின்  ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு  அண்டெஸ்  மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும்  பாலம்  மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. ப...

Things to know about Amazon

அமேசான் மழைக்காடு  என்பது  தென் அமெரிக்காவின்   அமேசான்  ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய  மழைக்காடு  ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள்  பிரேசில்  (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது),  கொலம்பியா ,  பெரு ,  வெனிசுலா ,  ஈக்வெடார் ,  கயானா ,  பொலிவியா ,  சுரிநாம் ,  பிரெஞ்சு கயானா  ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. [2]  உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன்  பூச்சியினங்களுக்க...

”ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” - ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா!

2018 கேரளா வெள்ளத்தின் போது நிவாரணப் பணியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாதன், தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மின்சாரம், நகர்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை துறைகளின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செய்லாளருக்கு வெள்ளிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கண்ணன் அனுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் தம்மை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “நாட்டின் ஒரு பகுதியில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து நாட்டின் பிற பகுதிகளில் யாரும் எதிர்வினையாற்றாதது என்னை பாதிக்கிறது. எல்லா இடங்கிளிலும் சிறிது சிறிதாக இது நடந்து வருகிறது. இதனை ஏற்க முடியாது என்கிற எனது எண்ணத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ''எனது கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நான் ஆட்சிப்பணியில் சேரும் போது மற்றவர்க...

இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு

இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு படத்தின் காப்புரிமை "இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன. வருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2041ஆம் ஆண்டு வாக்கில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியைவிட அதிக குறைந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது. எனினும், தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறையத் தொடங்கும் நிலை மாறலாம். மக்கள்தொகை கணிப்புகளை பொறுத்தவரை, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துக்கொண்டே வரும் என்றும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், 2020-21ஆம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், 2031-41 வரையிலான காலக்கட்டத்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே நாட்டின் மக்கள் ...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

டெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 66. கடந்த ஓராண்டுக்கும் மேலாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். இதன் காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அருண்ஜெட்லி போட்டியிடவில்லை. கடந்த 9-ம் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சனை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அருண் ஜெட்லியின் உடல்நிலை குறித்து மருத்தவர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்து வந்தனர். அருண் ஜெட்லிக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 66. 

ஜி7 என்றால் என்ன? சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை?

படத்தின் காப்புரிமை AFP Image caption 2018ஆம் ஆண்டின் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏங்கலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள் பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் ஜி7 45வது உச்சி மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. ஜி7 என்றால் என்ன? அதில் எந்தெந்த நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? அதில் என்ன நடக்கும்? இதனை தொகுத்து வழங்குகிறது இக்கட்டுரை. ஜி7 என்றால் என்ன? முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன. சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன. இதில் என்ன நடக்கும்? முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன. படத்தின் காப்புரிமை அதற்...

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? - விரிவான தகவல்கள்

அமேசான் காட்டுத்தீ: என்ன நடக்கிறது அங்கே? நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? - விரிவான தகவல்கள் 'புகை நாட்டுக்கும் உயிருக்கும் கேடு' , ' புகை உயிரைக் கொல்லும்' - இது நாம் அனைவருக்கும் தெரிந்த வாசகம். இதனை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் இந்த முகேஷ் கதையை திரையரங்குகளில் திரையிடுகிறார்கள். இப்போது ஏன் இந்தக் கதை என்கிறீர்களா? காரணமாகதான் முகேஷின் நுரையீரல் எப்படி புகையால் பழுதடைந்ததோ... அதுபோல பூமியின் நுரையீரல் பழுதடைந்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மிக மிக மோசமாக. தெளிவாகவே சொல்லி விடலாம். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு. என்ன நடக்கிறது? பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது. படத்தின் காப்புரிமை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை. 2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்...