Skip to main content

இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு

இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு


(கோப்புப்படம்)படத்தின் காப்புரிமை
"இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன.
வருடாந்திர அடிப்படையில் பார்த்தோமானால், 1971ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மக்கள்தொகை குறைந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி, 2041ஆம் ஆண்டு வாக்கில் வருடாந்திர மக்கள் தொகை பெருக்கத்தில், இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும் சராசரியைவிட அதிக குறைந்த நிலையை அடையும் வாய்ப்புள்ளது.
எனினும், தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இருந்து குடியேறுவோர் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மக்கள்தொகை குறையத் தொடங்கும் நிலை மாறலாம்.
இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு
மக்கள்தொகை கணிப்புகளை பொறுத்தவரை, இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துக்கொண்டே வரும் என்றும், குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், 2020-21ஆம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், 2031-41 வரையிலான காலக்கட்டத்தில் 0.5 சதவீதத்திற்கும் குறைவாகவே நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இருக்குமென்றும் தெரிகிறது.
அடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள்தொகை அதிகரிப்புக்கு மிகப்பெரிய காரணம் மக்கள்தொகை வளர்ச்சியில் உண்டாகும் வேகமும், மக்களின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிப்பதும் ஆகும்.
இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு
ஏற்கனவே சரிவடைய தொடங்கிவிட்ட இந்தியாவின் இளையோர் (0-19 வயதுடையோர்) விகிதம், 2011இல் 41 சதவீதமாக இருந்த நிலையில், அது 2041இல் 25 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், 2011இல் 8.6 சதவீதமாக இருந்த இந்தியாவின் முதியோர்களின் (60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர்) எண்ணிக்கை, 2041இல் இரட்டிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு
இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் கருவுறுதல் விகிதம் (ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் சராசரியாக பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை) தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.
கருவுறுதல் விகிதத்தில் டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பெரியளவில் மாற்றமில்லை.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 10.4 சதவீதமாக உள்ள தமிழ்நாட்டின் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2041ஆம் ஆண்டு 22.6 சதவீதமாக அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இது நாட்டின் சராசரி அளவைவிட அதிகமானதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

About Amazon River

அமேசான் ஆறு   அமேசான்   தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு  மிசிசிப்பி ,  நைல் , மற்றும்  யாங்சே  ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த  ஆற்றின்  ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு  அண்டெஸ்  மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும்  பாலம்  மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. ப...

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு  என்பது  தமிழர் கலை  வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு  வில்லுப்பாட்டு  எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:  உடுக்கை ,  குடம் ,  தாளம் , கட்டை என்பனவாகும். மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது. ‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்...

”ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” - ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா!

2018 கேரளா வெள்ளத்தின் போது நிவாரணப் பணியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாதன், தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மின்சாரம், நகர்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை துறைகளின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செய்லாளருக்கு வெள்ளிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கண்ணன் அனுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் தம்மை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “நாட்டின் ஒரு பகுதியில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து நாட்டின் பிற பகுதிகளில் யாரும் எதிர்வினையாற்றாதது என்னை பாதிக்கிறது. எல்லா இடங்கிளிலும் சிறிது சிறிதாக இது நடந்து வருகிறது. இதனை ஏற்க முடியாது என்கிற எனது எண்ணத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ''எனது கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நான் ஆட்சிப்பணியில் சேரும் போது மற்றவர்க...