Skip to main content

ஜி7 என்றால் என்ன? சீனா இதில் ஏன் சேர்க்கப்படவில்லை?

2018ஆம் ஆண்டின் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏங்கலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள்படத்தின் காப்புரிமைAFP
Image caption2018ஆம் ஆண்டின் ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏங்கலா மெர்கல் உள்ளிட்ட தலைவர்கள்
பிரான்ஸின் பியரிட்ஸ் நகரில் ஜி7 45வது உச்சி மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. ஜி7 என்றால் என்ன? அதில் எந்தெந்த நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? அதில் என்ன நடக்கும்?
இதனை தொகுத்து வழங்குகிறது இக்கட்டுரை.

ஜி7 என்றால் என்ன?

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே ஜி7. அதாவது Group of Seven.
இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இதாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.
சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு, தங்கள் சமூகம் இருப்பதாக இந்த நாடுகள் தங்களை கருதிக் கொள்கின்றன.

இதில் என்ன நடக்கும்?

முதன்முதலில் 1975ல், உலக பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடும் முயற்சியில் தங்களின் யோசனைகளை பரிமாற்றிக் கொள்வதற்காக ஆறு நாடுகள் கூடி சந்தித்தன.
ஜி7படத்தின் காப்புரிமை
அதற்கு அடுத்த ஆண்டு கனடா இந்த அமைப்பில் உறுப்பினரானது. 1998இல் உறுப்பினரான ரஷ்யா உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை தன்னுடன் 2014இல் இணைத்துக் கொண்டதால் நீக்கப்பட்டது. அதன்பின் ஜி8 மீண்டும் ஜி7 ஆனது.
ஆண்டு முழுவதும் அவ்வப்போது, ஜி7 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், சில முக்கிய விஷயங்களை விவாதிக்கக் கூடுவார்கள்.
ஆண்டுதோறும் இந்த மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருக்கும். அந்த நாடே அந்த ஆண்டுக்கான மாநாட்டை நடத்தும்.
ஆற்றல் உற்பத்தி கொள்கை, பருவ நிலை மாற்றம், எய்ட்ஸ் மற்றும் உலகபாதுகாப்பு ஆகியவை அங்கே விவாதிக்கப்படும் சில விஷயங்களாகும்.
மாநாட்டின் இறுதியில் என்னவெல்லாம் ஒப்புக்கொள்ளப்பட்டதோ, அவையெல்லாம் அறிக்கையாக வெளியிடப்படும்.
ஜி7 மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்களோடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவரும் கலந்து கொள்வார்கள்.
பொதுவாக மற்ற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.
இந்தாண்டு பியரிட்ஸில் நடைபெறும் மாநாட்டில் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

இதனால் என்ன நன்மை உண்டா?

தற்போதைய காலத்திற்கு தொடர்பில்லாமல் இருக்கிறது என்று ஜி7 குழு விமர்சிக்கப்பட்டாலும், இதனால் சில நன்மைகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. எய்ட்ஸ், டிபி, மலேரியாவுக்கு எதிராக போராட சர்வதேச நிதி திரட்ட இந்த ஜி7 குழு உதவி இருக்கிறது. இதனால் 2002ஆம் ஆண்டில் இருந்து 27 மில்லியன் மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2016 பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்த இந்த மாநாடு உந்துகோலாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஜி7படத்தின் காப்புரிமை

இந்த உறுப்பு நாடுகளில் சீனா ஏன் இடம்பெறவில்லை?

உலகின் அதிக மக்கள் தொகை மற்றும் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. எனினும் தனிநபர் சொத்து என்பது குறைவாக இருக்கிறது. ஜி7 உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கும் அளவிற்கு சீனா இல்லை என்பதால் அந்நாடு இக்குழுவில் இடம் பெறவில்லை.

ஜி7 நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

ஜி7 நாடுகளுக்குள் அதிகளவில் கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. இறக்குமதிக்கான வரி மற்றும் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில் கடந்தாண்டு கனடாவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முரண்பட்டார்.
சமகால சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரங்களை இந்த மாநாடு பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் எந்த நாடுகளும் இந்த ஜி7-ல் இடம் பெறவில்லை.
மேலும் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள், ஜி20-ல் இடம் பெற்றிருந்தாலும் ஜி7-ன் உறுப்பினர்களாக இல்லை.

Comments

Popular posts from this blog

About Amazon River

அமேசான் ஆறு   அமேசான்   தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு  மிசிசிப்பி ,  நைல் , மற்றும்  யாங்சே  ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த  ஆற்றின்  ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு  அண்டெஸ்  மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும்  பாலம்  மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. ப...

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு  என்பது  தமிழர் கலை  வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு  வில்லுப்பாட்டு  எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:  உடுக்கை ,  குடம் ,  தாளம் , கட்டை என்பனவாகும். மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது. ‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்...

”ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” - ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா!

2018 கேரளா வெள்ளத்தின் போது நிவாரணப் பணியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாதன், தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மின்சாரம், நகர்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை துறைகளின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செய்லாளருக்கு வெள்ளிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கண்ணன் அனுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் தம்மை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “நாட்டின் ஒரு பகுதியில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து நாட்டின் பிற பகுதிகளில் யாரும் எதிர்வினையாற்றாதது என்னை பாதிக்கிறது. எல்லா இடங்கிளிலும் சிறிது சிறிதாக இது நடந்து வருகிறது. இதனை ஏற்க முடியாது என்கிற எனது எண்ணத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ''எனது கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நான் ஆட்சிப்பணியில் சேரும் போது மற்றவர்க...