Skip to main content

2027-ல் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சும்: ஐ.நா. அறிக்கை

2050-ல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, டான்சேனியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் மட்டும் உலகின் பாதி மக்கள் வசிப்பர்.





மக்கள் தொகையில் இந்தியா 2027-ல் சீனாவை மிஞ்சும் என்று ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2050-க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 மில்லியன் அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.
சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து சிந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், ’தி வெர்ல்ட் பாபுலேஷன் ப்ராஸ்பெக்ட்ஸ் 2019: ஹைலைட்ஸ்’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள் தொகை பிரிவு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகெங்கிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை 2 பில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, தற்போதைய 7.7 பில்லியனில் இருந்து 2050-ல் 9.7 பில்லியனாக உலக மக்கள் தொகை அதிகரித்திருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகில் 11 பில்லியன் மக்கள் வசிப்பர்.
2050-ல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, டான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் மட்டும் உலகின் பாதி மக்கள் வசிப்பர்.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாலும், மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் உலகில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2050-ல் ஆறு பேரில் ஒருவருக்கு 65 வயது கடந்திருக்கும் (16 %). இது, 2019-ல் பதினோரு பேரில் ஒருவர் (9 %) என்ற விகிதத்தில் உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் 2019-ஐ (143 மில்லியன்) காட்டிலும் 2050-ல் (426 மில்லியன்) மும்மடங்கு அதிகம் இருப்பர்.
”மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் ஏழை நாடுகளே அதிகம் உள்ளன. இதனால் வருமை ஒழிப்பு, சமத்துவம், பசி, ஊட்டச்சத்து குறைபாடு, கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த விடயங்களை மேம்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும். யாரும் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறைக்கான கீழ்ப் பொதுச் செயலர் லியூ சென்மின் எச்சரித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

About Amazon River

அமேசான் ஆறு   அமேசான்   தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு  மிசிசிப்பி ,  நைல் , மற்றும்  யாங்சே  ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். இந்த  ஆற்றின்  ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு  அண்டெஸ்  மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அமேசான் ஆறு எந்த இடத்திலும்  பாலம்  மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. ப...

வில்லுப்பாட்டு

வில்லுப்பாட்டு  என்பது  தமிழர் கலை  வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு  வில்லுப்பாட்டு  எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:  உடுக்கை ,  குடம் ,  தாளம் , கட்டை என்பனவாகும். மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது. ‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்...

”ஜம்மு காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” - ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா!

2018 கேரளா வெள்ளத்தின் போது நிவாரணப் பணியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கண்ணன் கோபிநாதன், தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் மின்சாரம், நகர்புற மேம்பாடு மற்றும் வேளாண்மை துறைகளின் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை செய்லாளருக்கு வெள்ளிக்கிழமை தனது ராஜினாமா கடிதத்தை கண்ணன் அனுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் அசாதாரண சூழல் தம்மை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். “நாட்டின் ஒரு பகுதியில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து நாட்டின் பிற பகுதிகளில் யாரும் எதிர்வினையாற்றாதது என்னை பாதிக்கிறது. எல்லா இடங்கிளிலும் சிறிது சிறிதாக இது நடந்து வருகிறது. இதனை ஏற்க முடியாது என்கிற எனது எண்ணத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்,” என்று கண்ணன் கோபிநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ''எனது கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். நான் ஆட்சிப்பணியில் சேரும் போது மற்றவர்க...